புதிய தொழில் சட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளீர்க்க நடவடிக்கை - தொழில் அமைச்சர்

புதிய தொழில் சட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளீர்க்க நடவடிக்கை - தொழில் அமைச்சர்

புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க இருப்பதுடன் அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்காக  உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தாெழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு  அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு தெரிவித்தார்.

தேசிய தொழில் ஆலாேசனை சபை கூட்டம் கூடிய போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

May be an image of 3 people, dais and text that says "0 RESERVED"

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது இருக்கும் காலம் கடந்த  தொழில் சட்டங்களுக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 

சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளுக்கு திருத்தங்களை முன்வைக்காமல், தொழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும். 

தொழில் சட்டத்தை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் குறித்த திருத்தங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
May be an image of 5 people and dais

தொழில் சட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களில்  கருத்துப் பத்திரம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்வோம். 

இதுவரை அதிகமான தொழில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை அது தொடர்பில் சமர்ப்பித்திருக்கின்றன.

இதற்கு சமமாக சட்ட வரைபு திணைக்களத்துடன் இணைந்து பிரேரணைகளை வரைபு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

சட்ட வரைபு திணைக்களத்தினால் சட்ட மூலம் தயாரிக்கப்பட்ட பின்னர், அதுவும் மக்கள் கருத்தை பெற்றுக்கொள்வதற்காக பகிரங்கப்படுத்தப்படும். 

May be an image of 4 people and dais

தொழில் சங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களும் சட்ட வரைபு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மேலும் புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றையும் உள்ளடக்க இருப்பதுடன் அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்காக  தேசிய தொழில் ஆலாேசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிற்சங்கங்களை சேர்ந்த உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத்தொழிலாளர்களுக்கு தாக்கம் செலுத்தும் விசேட நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை அந்த குழுவுக்கு வழங்கி இருக்கிறோம் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image