பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

நாளை (03) முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதாரத்துற உத்தியோகத்தர்கள், ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரி சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் நாளைய தினம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்தவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றதை அடுத்து, தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image