விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்: கொடுப்பனவு செலுத்த நடவடிக்கை

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்:  கொடுப்பனவு செலுத்த நடவடிக்கை

5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக நேற்று தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

 கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செய்தி வெளியானதையடுத்து, குறித்த முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image