ஊவா மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

ஊவா மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

ஊவா மாகாண சபை கல்வி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கல்வித்துறை பட்டதாரிகள் 21 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 25.04.2023 செவ்வாய்க்கிழமை ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது கொழும்பு, பேராதெனிய, கிழக்கு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களின் கல்வித்துறையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதுளை, பண்டாரவளை, வெலிமடை, பஸ்ஸர, வியலுவ, மஹியங்கனை, பிபிலை, மொனராகலை, வெல்லவாய மற்றும் தனமல்வில கல்வி வலையங்களில் காணப்படும் வசதி குறைந்த பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு ஊவா மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரத்ன, ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சீ. பிரியந்தி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.எம். நந்தசேன, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம். ஜீவந்த ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image