வடக்கின் வலுசக்தி திட்டம் குறித்து அதானி குழும அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சு

வடக்கின் வலுசக்தி திட்டம் குறித்து அதானி குழும அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சு

அதானி குழும அதிகாரிகளுடன் அரசாங்கம் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள அதானி குழும அதிகாரிகள், மின் சக்தி அமைச்சு, மின்சார சபை மற்றும் நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டம் மற்றும் அதன் இதுவரையிலான முன்னேற்றம் குறித்தும் அதானி குழுவினரால் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன்இ அந்த வேலைத்திட்டத்தை, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image