வீதிகளை தடை செய்யக்கூடாது - நீதிமன்ற உத்தரவு

வீதிகளை தடை செய்யக்கூடாது - நீதிமன்ற உத்தரவு

இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலிமுகத்திடல் வீதிகளை தடை செய்யக்கூடாது என்று கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னணி சோஷலிஸ கட்சி செயற்பாட்டாளர் துமிந்த நவகமுவ உட்பட 27 தனிநபர்கள் வீதியை தடை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரதினம் கொண்டாடப்படும் நிலையில் அதனை தடை செய்யும் வகையில் காலிமுகத்திடல் வீதியை மறித்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறி, கோட்டை, கம்பனிவீதி மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image