பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொடர் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

200 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளாத உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வலுவான நிலையான வேலைத்திட்டம் அங்கு தயாரிக்கப்பட்டதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நலன் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தொழிலாளர் திணைக்களத்திடம் முன்வைத்ததில், அப்பிரச்சினைகளுக்கு சாதகமான கருத்துக்கள் கிடைக்காமை குறித்து விசேட கவனம் செலுத்தினேன்.

இது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image