வடக்கு ரயில் சேவை இன்று முதல் அநுராதபுரத்துடன் இடைநிறுத்தம்

வடக்கு ரயில் சேவை இன்று முதல் அநுராதபுரத்துடன் இடைநிறுத்தம்

கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (05) முதல் அநுராதப்புரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான தண்டவாளப்பாதையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் ஜனவரி 5 ஆம் திகதியில் இருந்து இப்பாதையின் ஊடான ரயில சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்திய கடன் உதவி திட்டத்தின் 91 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இந்த பாதை திருத்தப்படவுள்ளது.  எதிர்வரும் 5 மாதங்களுக்கு கொழும்பில் இருந்து காங்கேஸன்துறைக்கு நேரடி ரயில் சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image