2022 சாதாரணதரப் பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை (18) ஆரம்பம்

2022 சாதாரணதரப் பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை (18) ஆரம்பம்

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை(18) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த மதிப்பீட்டு பணிகள் பாடசாலை விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படுவதால் எந்தவொரு பாடசாலையும் மேலதிகமாக மூடப்பட மாட்டாது என அவர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image