போதைப்பொருள் தடுப்பு: ஆசிரியர்களுக்கு வி​சேட பயிற்சி

போதைப்பொருள் தடுப்பு: ஆசிரியர்களுக்கு வி​சேட பயிற்சி
போதைப்பொருளின் ஆபத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் விசேடத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
 
முதற்கட்ட பயிற்சியில் கொழும்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 200 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் பாடசாலை மாணவர்கள்  போதைப்பொருளை கொண்டுவருவதை தடுக்கும் வகையில் மாணவர்களின் பைகளை எழுமாறான முறையில் சோதனை செய்யும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
மூலம் - டெக்மோ(ர்)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image