அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்தாக்க நடவடிக்கை - பிரதமர்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்தாக்க நடவடிக்கை - பிரதமர்

கொவிட்-19 காலத்தில் வெளியிடப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்ய அவசியமான நடவடிக்கை அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெறும், பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மீதான விவாத்தில், கருத்து வெளியிட்டபோது, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பழைய சுற்றறிக்கையை, சுட்டிக்காட்டி, பாடசாலைக்கு எந்தவொரு ஆடையிலும் சமூகமளிக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த சுற்றறிக்கையை இரத்துச் செய்ய அவசியமான நடவடிக்கை அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image