அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு போட்டிப்பரீட்சை - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவிப்பு!

அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு போட்டிப்பரீட்சை - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவிப்பு!

டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பொதுப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுநர் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக இப்பொதுப் பரீட்சை நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இப்பொதுப்பரீட்சையினூடாக 26000 பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பொதுப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மூலமாக தகுதியானவர்கள் சேவையில் இணைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image