கதிரியக்க வசதிகளின்றி தேசிய வைத்தியசாலையின் விபத்து எலும்பியல் பிரிவு

கதிரியக்க வசதிகளின்றி தேசிய வைத்தியசாலையின் விபத்து எலும்பியல் பிரிவு

எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசியமான வசதிகள் இல்லாமையினால் தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் பிரிவு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பி. மெடிவத்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாம் நிலை எலும்பியல் சிகிச்சை நிலையமான கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சை காணப்படுகிறது. கதிரியக்க பதிவுபடுத்துவதற்கு தேவையான அட்டைகளை கொள்வனவு செய்தவற்கு முடியாமையினால் இந்நிலை தோன்றியுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நெருக்கடியால் முழு அரசாங்க மருத்துவமனை அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image