அரச ஊழியர்களுக்கு இந்தமாத வேதனம் எப்போது வைப்பிலிடப்படும்?

அரச ஊழியர்களுக்கு இந்தமாத வேதனம் எப்போது வைப்பிலிடப்படும்?

பல மாகாண சபைகளில், அரச ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வேதனத்தை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதாந்தம் 25ஆம் திகதியாகும் போது, அவர்களுக்கு வேதனம் வழங்கப்படும் நிலையில், வேதனத்தை வைப்பிலிடுவது 24ஆம் திகதி இடம்பெறுவது வழமையாகும்.

எனினும், எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை காரணமாக, அரச விடுமுறையாக உள்ளதுடன், வார இறுதியில் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அமைந்துள்ளமையால், இன்றைய தினம் வேதனத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டியுயள்ளது.

ஆயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், திறைசேரியிடமிருந்து குறித்த பணம் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

4000 அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதில் உள்ள 3 பிரச்சினைகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

இந்த நிலைமைக்கு மத்தியில், நிதி அமைச்சின் ஒதுக்கீடு கிடைத்த பின்னர், ஒக்டோபர் மாதத்திற்கு உரித்தான வேதனத்தை, எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வங்கியில் வைப்பிலிட மாகாண செயலக காரியாலயம் தீர்மானித்துள்ளது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image