​பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்

​பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக ரூபா 15000 வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சிணையும் இல்லை எனவும் தீபாவளி முற்பணம் வழங்க தாம் அனுமதித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடக பேச்சாளர் ரொஷான் இராஜதுறை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு இம்முறை ரூபா 10000 தீபாவளி முற்பணமாக வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் உப தலைவர் பராக்கிரம செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாட்டடில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூபா 15000 வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image