அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது!

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது!

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட துணை வரவுசெலவு திட்டம் 2022 நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டபோது கட்டாய ஓய்வு பெறும் வயதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படும். நிதி, பொருளாதார ஸ்தீரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image