தொழில்வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளுக்கு நற்செய்தி!

தொழில்வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளுக்கு நற்செய்தி!

பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் போது பல்வேறு காரணங்களினால் வாய்ப்பு பெறாத பட்டதாரிகளுடைய பிரச்சினைக்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச நிருவாக, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குறைப்பாடுகளினால் 461 பேர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர், தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், மேற்படி விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சின் செயலாளர் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image