அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்த கல்வி அமைச்சு தீர்மானம்

அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்த கல்வி அமைச்சு தீர்மானம்

போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நிலவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகையை வழங்குவதற்காக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஆசிரியர்களின் கோரிக்கையை ஆராய்ந்து அவர்களுக்கு வசதியான அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை இணைப்பானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் மாத்திரம் நடைமுறையில் இருக்கும்.

அனைத்து வகையிலான இணைப்புகளும், பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரண்டு பாடசாலைகளின் அதிபர்களின் எழுத்துமூல இணக்கப்பாட்டுக்கு அமைய மாத்திரம் இடம் பெற வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image