தொழிற்திணைக்கள சேவைகளுக்கு தடையேற்படாது - தொழில் திணைக்களம்

தொழிற்திணைக்கள சேவைகளுக்கு தடையேற்படாது - தொழில் திணைக்களம்

தொழிற் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்களை வௌ்ளிக்கிழமைகளை மூட தீர்மானித்திருந்தபோதிலும் தொழில் திணைக்களத்தினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவையில் எந்த தடையும் இல்லை என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் வழங்கும் நடவடிக்கைகளில் எவ்வித தடையோ தாமதமோ ஏற்படாது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வௌ்ளிக்கிழமைகளில் உரிய அதிகாரிகள் அலுவலகத்திற்கு சமூகமளிக்காதபோதிலும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு சுற்றுநிருபம் மூலம் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image