பிரதமர் ரணிலின் முயற்சிக்கு இ.தொ.கா பூரண ஒத்துழைப்பு – ஜீவன் அறிவிப்பு

பிரதமர் ரணிலின் முயற்சிக்கு இ.தொ.கா பூரண ஒத்துழைப்பு – ஜீவன் அறிவிப்பு

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

 
தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், 
 
'நாட்டில் தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை சமாளித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான உங்கள் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்கும்.' என்று தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், தமது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், 
 
'இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, நெருக்கடியை விரைவில் தீர்க்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுக்கிறேன்.' என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image