ஹர்த்தாலுக்கு ஆதரவு இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை இடைநிறுத்தம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை இடைநிறுத்தம்

நாடுதழுவிய ரீதியில் நாளை (06) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு (நிர்வாக முடக்கல்) ஆததரவளிப்பதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

6ஆம் திகதி நடத்தவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே சேவை ஒன்றிணைந்த சங்கத்தின் இணைப்பாளர் எஸ்.பி விதானகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  ரயில் இயக்கப் பணிகள், தொழிற்பாடுகள், ரயில் கட்டுப்பாட்டுப் பணிகள், நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி

பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image