மஸ்கெலியா நகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது

மஸ்கெலியா நகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது

அரசுக்கு எதிராக தோட்ட தொழிலாளர்களினால் மஸ்கெலியா நகரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நல்லத்தண்ணீரில் இருந்து மஸ்கெலியாவரை நடைபவணியாக வந்த பிரவுன்லோ,கங்கேவத்த, கலனிவத்த மற்றும் கிளண்டில் தோட்டப்புர மக்களும் மவுசாலை,மறே மற்றும் சீத்தகங்குள கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் மஸ்கெலிய நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கட்சி, இனம், மதம் பேதம் இன்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்கள். இன்றைய அரசாங்கம் உடனே விலக வேண்டும் எனவும், ஜனாதிபதி வேண்டாம் எனவும், ரூபா 1000 வேதனம் எங்கே? அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக அவர்கள் படும் வேதனை, சலுகை விலை கோதுமை மாவு எங்கே?  இதனை சரி  செய்ய முடியாத நீங்கள் உடனே பதவி துறக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோசம் எழுப்பியவாரு பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

m1.jpg

m6.jpg

m7.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image