ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரல்

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரல்

பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளையும்,பட்டதாரி பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளையும் வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல், விண்ணப்பப்படிவம். இணைப்புகள் என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அறிவித்தல்

விண்ணப்பப்படிவம்

இணைப்பு 01

இணைப்பு 02

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image