மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள்

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள்

நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களுக்கு சுகாதார தொழிற்சங்க ஒன்றிணைவு ஆதரவு வழங்கும் வகையில் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அவசர காலத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், அடக்குமுறையை நிறுத்தல், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குக, மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்க, மருத்துவ சேவைக்கு அவசியமான அனைத்து அத்தியவசிய தேவைகளையும் உடனடியாக வழங்குக, மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாக்குக ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களுக்கு முன்பாக நாளை (05) 12.00 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இப்போராட்டமானது ஒரு வாரகாலத்திற்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image