பாடசாலைகளின் நேரத்தில் மாற்றம்: பரீட்சைக் காலமும் அறிவிப்பு

பாடசாலைகளின் நேரத்தில் மாற்றம்: பரீட்சைக் காலமும் அறிவிப்பு

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில், அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இநற்கமைய, இந்த ஆண்டு 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால், அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்திலும், சாதாரணத்தர பரீட்சை 2023 ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image