அடுத்த வாரம் முதல் மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் சாத்தியம்?

அடுத்த வாரம் முதல் மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் சாத்தியம்?

தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image