ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க வயதெல்லை நீக்கப்படுமா?

ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க வயதெல்லை நீக்கப்படுமா?

ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான வயதெல்லையை நீக்குமாறு கோரி எதிர்வரும் 29ம் திகதி கல்வியமைச்சின் முன்பாக போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தேசிய/ மாகாண மட்ட பாடசாலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றியம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கம் என்பன இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இப்போராட்டத்தின் போது, தேசிய / மாகாண மட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஆசிரியர் சேவை வாய்ப்பினை வழங்குக, ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பினை வழங்குக, தென் மாகாண சிசுதரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவை வாய்ப்பினை வழங்குக, தகமையுடைய அனைத்து பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான சமமான வாய்ப்பினை வழங்குக, தற்காலிக நியமனத்திற்குப் பதிலாக ஒரே முறையில் சட்டரீதியான நிரந்தர நியமனத்தினை வழங்குக ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அநீதி இழைக்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image