ஏப்ரலில் நிரந்தர நியமனம் பெறவுள்ளவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை

ஏப்ரலில் நிரந்தர நியமனம் பெறவுள்ளவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆட்சேர்க்கப்பட உள்ள பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிககளை ஆட்சேர்ப்பது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அவசர அறிவித்தலை விடுத்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் வேலைத்திட்டம் 2020 இன் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் தொடர்பான தகவல்கள்.

இந்த வேலைத்திட்டத்தின்கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களில் 2022.04.01 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர அடிப்படையில் நியமனம் கிடைக்கப்பெறவுள்ள நீங்கள், வித்தியாலயத்தில் தற்போதுவரை பயிற்சி பெறுகின்ற பயிலுனர்களாக இருப்பீர்களாயின், தங்களது பெயர் மற்றும் தகவல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் அடிப்படையில் தயாரித்து 2022.03.25ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி வசதி இல்லாதவர்கள் 0112 785 491 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

மின்னஞ்சல் முகவரி (email): இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாடசாலையின் பெயர் :
பாடசாலை அமைந்துள்ள வலயம் :
பாடசாலை அமைந்துள்ள மாவட்டம் :

தொடர் இலக்கம்

உத்தியோகத்தரின் பெயர் 

தேசிய அடையாள அட்டை இலக்கம்

பயிலுநரின் கைத்தொலைபேசி இலக்கம் 

பயிற்சிக்கு அறிக்கையிட்ட திகதி

         
         

 

 

மேலும் செய்திகள்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்த மாகாண ரீதியில் மனு கையளிக்கும் திட்டம்

அரச ஊழியர்கள் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை

276133054_484261303413761_1064270476072241246_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image