பட்டதாரி பயிலுனர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான நற்செய்தி

பட்டதாரி பயிலுனர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான நற்செய்தி

பயிலுனர் பட்டதாரிகளின் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை உள்ளது.

பலருக்கு கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் கிடைக்காதுள்ளன. சிலருக்கு ஜனவரி மாத கொடுப்பனவு வழங்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் அரச சேவைகள் அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் ஆலோக்க பண்டாரவுடன் பேச்சு நடத்தினோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொடுப்பனவு வழங்கப்படவில்லை நாங்கள் மாவட்ட செயலாளர்களையும், அமைச்சின் அதிகாரிகளையும் தெளிவுபடுத்தி உள்ளோம். அதனையடுத்து, அந்தக் கொடுப்பனவுகளை வழங்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனவே ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத கொடுப்பனவு கிடைக்காத பயிலுனர் பட்;டதாரிகள் மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளரை சந்தித்து இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதற்கான நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி இந்தப் ப்pரச்சினையைத் தீர்த்துக்கொள்ளமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் கட்டணம் அதிகரிப்பு: முழுமையான கட்டணப் பட்டியல் இணைப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image