சர்வதேச மகளிர் தினத்தையொட்டி லிந்துலையில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி லிந்துலையில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை – லிந்துலை நகரில் கடந்த 8ம் திகதி விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் அதன் பொது சுகாதார பரிசோதகர்கள், தாதிகள்,அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், பிரதேச பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்', 'பெண்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' 'இளம் வயதில் கர்ப்பம் தரித்தலை தவிர்ப்போம்', போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி லிந்துலை நகரம் வரை சென்றதுடன் அங்கு பெண்களின் முக்கியத்துவம் தொடர்பாக ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றமையும் குறிப்பிடதக்கது.

 

W2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image