நாடு முடக்கப்படுமா? நடமாட்டக் கட்டுப்பாடா? இராஜாங்க அமைச்சரின் பதில்

நாடு முடக்கப்படுமா? நடமாட்டக் கட்டுப்பாடா? இராஜாங்க அமைச்சரின் பதில்

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ எந்த ஒரு தயார் நிலையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்காக போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் 1,287 கொவிட் நோயாளர்கள் பதிவாகினர். இதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 617,189 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று 28 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,572 ஆக அதிகரித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image