பூரண தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கத் தடை

பூரண தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கத் தடை

பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்கு விதிகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை என்பது, இயைபான ஆள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்துரைக்கப்பட்டவாறு, இயைபான தடுப்பூசி ஏற்றலின் தேவைப்பட்ட மருந்தளவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று பொருளாகும் என அந்த வர்த்தமானியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ள இணைப்பில்

விசேட வர்த்தமானி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image