நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து அரச சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் கலந்துரையாடியுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் அமைச்சிற்கு சென்று அதிகாரிகளை சந்தித்ததாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்ற அடிப்படையில் இரண்டு பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரச சேவைகள் அமைச்சின் செயலாளரையும், ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதற்காக ஆவணங்களை இன்று நாங்கள் கையளிதது கலந்துரையாடினோம்.

தற்போது பயிற்சியில் உள்ள தொடர்ந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பிரச்சினைகள் தொடர்பில், அதுகுறித்து கடந்த 30-ஆம் திகதிவரை எமக்கு கிடைக்கப்பெற்ற பிரச்சினைகளை உரியவாறு தயார்ப்படுத்தியுள்ளோம்.

எந்தெந்த துறைகளில் பிரச்சினை இருக்கின்றது என்பது தொடர்பிலும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகள் அடங்கிய ஆவணங்களையும் இன்றையதினம் ஒன்றிணைந்து சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமும், அமைச்சின் செயலாளரிடமும் நாங்கள் இன்றைய தினம் கையளித்தோம் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image