தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு உள்ளாகிவரும் பட்டதாரி பயிலுநர்கள் - டிப்ளோமாதாரிகளுக்கான அறிவித்தல்

தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு உள்ளாகிவரும் பட்டதாரி பயிலுநர்கள் - டிப்ளோமாதாரிகளுக்கான அறிவித்தல்
தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் பட்டதாரி பயிலுநர்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
2020/2021 இல் ஆட்சேர்க்கப்பட்டு, பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு ஆவணத்திலும் பெயரில்லாத, நிரந்தர நியமனம் கிடைக்காத, தற்காலிக நியமனம் கிடைக்காத, பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பிரச்சினைகள் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
 
ஒன்றிணைந்த பயிலுநர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன பேஸ்புக் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
 
இதற்கமைய நாளை (01) காலை 10 மணிக்கு அரச சேவைகள் அமைச்சுக்கு இந்த பிரச்சினைகளை கொண்டு செல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image