அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்புக்கான சுற்றுநிரூபம் இன்று!

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்புக்கான சுற்றுநிரூபம் இன்று!

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சுற்றுநிரூபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவில் முன்மொழியப்பட்டதற்கமைய இன்று சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.

 

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் 62 ஆக குறைக்குமாறு பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image