நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்கள் கடமைகளை பொறுப்பேற்றல் தொடர்பான அறிவித்தல்

நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவர்கள் கடமைகளை பொறுப்பேற்றல் தொடர்பான அறிவித்தல்
நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றல் தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்துடன் நேற்றுமுன்தினம் (03) இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணைக்குழுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
உத்தியோகத்தர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள சேவை நிலையங்களை 2022.01.07 ஆம் திகதி முதல் இந்த அமைச்சின் மிஸ்கோ மென்பொருளில் பிரவேசித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு அனைத்து உத்தியோகத்தர்களும் வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழுமையான சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
G01.jpg
G02.jpg
G03.jpg
G05.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image