ரயில்வே துறையிடமிருந்து வெளியான விசேட அறிவித்தல்

ரயில்வே துறையிடமிருந்து வெளியான விசேட அறிவித்தல்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவு முதல் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

எனினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாளை (27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image