அரச வைத்திய அதிகாரிகள் நாடுமுழுவதும் பணிப்புறக்கணிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் நாடுமுழுவதும் பணிப்புறக்கணிப்பு

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) காலை 08 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியர்களின் இடமாற்றம், புதிய வைத்தியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட விடயங்களில் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச இன்று ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு, இதனால் வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்படப் போகும் நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சும் அதன் அதிகாரிகளுமே பொறுப்பேற்ற வேண்டும் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image