தபால்துறை ஊழியர்கள் இன்று மாலை முதல் அடையாள பணப்புறக்கணிப்பு

தபால்துறை ஊழியர்கள் இன்று மாலை முதல் அடையாள பணப்புறக்கணிப்பு

தபால் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

இன்று பிற்பகல் 4 மணிமுதல் நாளை நள்ளிரவு வரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தபால் திணைக்கள சேவையில் பாரிய குறைப்பாடுகள் உள்ள போதிலும் அவை இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் படி சேவை முரண்பாடு பாரியளவில் உள்ளது.

திணைக்களத்தின் சில பணிகள் வேறு திணைக்களத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இவ்வாறான பல பிரச்சினைகளுக்கான தீர்வினை கோரியே குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம குறிப்பிட்டுள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image