தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் க.விக்னேஸ்வரானந்தனின் கையொப்பத்துடன் கடந்த 06ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
 
நாடு முழுவதும் உள்ள அரச தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (08) மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாமும் எமது ஆதரவினை வழங்குகின்றோம்.
 
நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு வடமாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்கி போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் - என்று தெரிவிக்கப்பட்டுளளது.
 
263756900_3177451659137805_2686446212787323493_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image