அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்

அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்

அரச ஊழியர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (12) வரவு- செலவுத் திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள்

2014 இல் கள உத்தியோகத்தர்களினால் வழங்கப்படுகின்ற அரசாங்க சேவையின் வினைத்திறனை அதிகரிப்;கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை நாம் ஆரம்பித்தோம். இம் முன்னெடுப்பின் கீழ் 146,381 கள அலுவலர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்கள் தமது அரசாங்க சேவையினை வழங்குவதற்கு குறித்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை இன்று நான் காணும்போது மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தினை மீண்டும்அறிமுகப்படுத்துவதற்கு நான்திட்டமிட்டுள்ளதுடன் அதன் நன்மைகளை அரசாங்க ஊழியர்களுக்கு மாற்றுகின்ற முறைமையொன்றினையும் செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image