கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி எதிர்வரும் 9ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கொழும்பு லிப்டன் சுற்றுவட்த்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இப்பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சட்டப்படி வேலை போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அன்றைய தினம் கொழும்புக்கு வரவுள்ளனர் என்றும் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுவதாவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image