சட்டப்படி வேலை தொடரும் - ஜோசப் ஸ்டாலின்!

சட்டப்படி வேலை தொடரும் - ஜோசப் ஸ்டாலின்!

மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் குறித்து தீர்மானிக்கப்படும்.

ஆரம்ப பிரிவு கற்பித்தல்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தடைப்பட்டிருந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தவாறே எமது போராட்டம் தொடரும். அதற்கமைய நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை ப்போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம். வரவுசெலவு முன்மொழிவுக்கு முன்னர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நாம் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image