பிரதமருக்கும், ஆசிரியர் சங்களுக்கும் இடையிலான சந்திப்புக்கான திகதி அறிவிப்பு

பிரதமருக்கும், ஆசிரியர் சங்களுக்கும் இடையிலான சந்திப்புக்கான திகதி அறிவிப்பு

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.



திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் பேச்சுவார்த்தைக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image