ரயில் சேவைகளை ஆரம்பிக்க திணைக்களம் தயார்

ரயில் சேவைகளை ஆரம்பிக்க திணைக்களம் தயார்

எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஜே. ஐ. டி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சேவையை ஆரம்பிக்க திணைக்களம் தயாராக இருந்தபோதிலும், சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய 2 வாரங்களுக்கு பிற்போடப்பட்டது. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 108 ரயில் சேவைகளை ஆரம்பிக்க திணைக்களம் தயாராக இருந்தது என்றும் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image