ரயில் சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? அறிவித்தல் இதோ...

ரயில் சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? அறிவித்தல் இதோ...

ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், ரயில் சேவைகள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



சகல ரயில் சேவைகளும் இடம்பெறுமாயின் அதன் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காரணிகளை கருத்திற்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு ரயில் சேவைகளை ஆரம்பிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பஸ் சேவைகள் மாகாணத்திற்குள் மாத்திரம் இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று (29) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image