வேலையற்ற பட்டதாரிகளின் நிகழ்நிலை போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளின்  நிகழ்நிலை போராட்டம்

!பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய திட்டமொன்றை வகுக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வழங்கும் வகையில் நிகழ்நிலை போராட்டமொன்று நேற்று (19) 5.00 மணிக்கு ஆரம்பமானது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வருடாந்தம் பெற்றுக்கொடுப்பதற்கு முறைசார்ந்த திட்டமொன்று இல்லாமையினால் பல பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பட்டதாரிகள் வருடாந்தம் எதிர்நோக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

BUDGET BUCKET ஆகும் நாட்டில் பட்டதாரி BITE ஆகுவாரா என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் முகப்புத்தக பக்கத்தினூடாக நேரடியாக இணையும் வாய்ப்பு பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image