ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உபகுழு நிதி அமைச்சருடன் சந்திப்பு

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உபகுழு நிதி அமைச்சருடன் சந்திப்பு

ஆசிரிய - அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளது. 

 
சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய - அதிபர் தொழிற்சங்கங்களை, அமைச்சரவை உபகுழு கடந்த நாட்களில் சந்தித்து கலந்துலையாடிருந்தது. 
 
இந்தநிலையில் நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளரும் பங்கேற்றிருந்தார். 
 
இந்த சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அலகப்பெரும, இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
 
இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்படும் என அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image