கர்ப்பிணிப் பெண்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம்!

கர்ப்பிணிப் பெண்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம்!

அரச சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் வீடுகளில் இருந்தே தமது கடமை பொறுப்புக்களை முன்னெடுக்கும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்று (05) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் குறித்த சுற்றுநிருபத்தை வௌியிட பொது நிருவாக அமைச்சு இணங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வாரத்திற்கு இரு தடவை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையிலான புதிய முறைக்கு ஏற்றாற்போன்ற சுற்றுநிருபம் வௌியிட இணக்கம் பெறப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image