அரச ஊழியர்கள் அனைவரும் வழமைபோல கடமைக்கு சமூகமளிக்க அறிவித்தல்

அரச ஊழியர்கள் அனைவரும் வழமைபோல கடமைக்கு சமூகமளிக்க அறிவித்தல்
பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அரச சேவைகளை வழமைபோல முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
 
எனவே கொவிட்-19 சுகாதார வழிகாட்டலுக்கு அமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமைபோல கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொவிட்-19 பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பணியாளரை கடமைக்கு அழைத்தல் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுதல் முதலானவை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image